ஆபாச படம் எடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. கிராம நிர்வாக அலுவலருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சேட்டபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் இளையராஜா. அந்த பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் பட்டா மாறுதலுக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கும் இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில்,அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்த படத்தை காட்டி மிரட்டியுள்ளார். அவரை மகாபலிபுரம் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO Sexually abused a woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->