மதுபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ-வை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரக்கோணம் அருகே அவளூர் கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 43). இவர் நெமிலி தாலுக்கா உத்திரம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனைவிவீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் ராமதாஸ் பதினோராம் வகுப்பு படிக்கும் தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஏஓ ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO Father harrasment to daughter in arakonam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->