மதுபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ போக்சோவில் கைது.!
VAO Father harrasment to daughter in arakonam
அரக்கோணம் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ-வை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரக்கோணம் அருகே அவளூர் கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 43). இவர் நெமிலி தாலுக்கா உத்திரம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனைவிவீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் ராமதாஸ் பதினோராம் வகுப்பு படிக்கும் தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஏஓ ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
English Summary
VAO Father harrasment to daughter in arakonam