வண்டலூரில் 28 சவரன் தங்க நகைகள் திருட்டு! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு: வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கோகுல ராமன் (வயது 32). இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்த கோகுலராமன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகளும்  திருடு போயிருந்ததை பார்த்தார்.

இது குறித்து, கோகுல ராமன் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு சென்று  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்களிடம் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். 

மேலும், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்து, இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

அதே பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vandalur robbery in home police inquiry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->