UPSC தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி & ரூ.3000 உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


UPSC முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் இருந்து  முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி பெற இன்று முதல் ஜூன் 17ம் தேதி வரை https://www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UPSC examiners free coaching in tamilnadu apply from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->