கருணாநிதி உருவச்சிலையை நாளை திறந்து வைக்கிறார் அமைச்சர் உதயநிதி!
Udayanidhi Stalin inaugurate karunanidhi statue
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர், இதனை உடனடியாக செயல்படுத்தும் வகையில் ஆலந்தூர் தொகுதியில் உள்ள குன்றத்தூர் கோவூர் அருகே கருணாநிதிக்கு சிலை அமைத்து, அங்கு கலைஞர் படிப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் உருவச்சிலையை நாளை மாலை திறந்து வைக்கிறார்.
இது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''முத்தமிழறிஞர் கலைஞருக்கு, குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பெரிய பணிச்சேரியில் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் வெண்கல திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவுருவச் சிலையை நாளை மாலை 6 மணிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் குன்றத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வரவேற்பார். மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் இந்த விழாவில் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவின் முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு நன்றியுரை தெரிவிக்கின்றனர் .
விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக முறையில் செய்யப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பும் கொடுக்க உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
Udayanidhi Stalin inaugurate karunanidhi statue