#தென்காசி || இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Twowheeler accident in thenkasi
தென்காசி மாவட்டத்தில் மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகன் (42). இவர் கடையநல்லூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வேலாயுதபுரம் அருகே, இருசக்கர வாகனம் சென்ற போது எதிர்பாராத விதமாக மாடு மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாம்பவர்வடகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler accident in thenkasi