இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழப்பு.!
Twowheeler accident in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வசிஷ்டபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் வியாபாரி பாபு (42). இவருடைய மனைவி வேல்விழி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பாபு மொத்த விலையில் பழங்கள் வாங்கி விற்பனை செய்வதற்காக திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பெரம்பலூர் திருச்சி-சென்னை நான்குவழிச்சாலையில் துறைமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பாபு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler accident in Perambalur