பொது இடத்தில் லஞ்சம் வாங்கிய போலீசார்கள்.!! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே போக்குவரத்து போலீஸார் இரண்டு பேர் லஞ்சம் வாங்கும்போது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி உள்ளிட்ட இருவரும் அப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது பதிவாகியுள்ளது. 

சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து போக்குவரத்து போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கரிடம், வீடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் படி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் ஏட்டு பாலாஜி உள்ளிட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இரண்டு பேர் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two police officers suspend for bribe in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->