தேனி.! தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது போலீசாரை பார்த்தவுடன் இரண்டு பேர் தப்பி ஓட முயன்று உள்ளனர். அவர்களை விரட்டியதில் ஒருவர் பிடிபட்டுள்ளார். 

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியை சேர்ந்த கலைமோகன்(25) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். 

இதேபோல் தென்கரை காவல்துறையினர் மயான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்த காமாட்சி(32) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two persons arrested for cannabis sellers in theni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->