போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் போதை மாத்திரை கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் தடாகம் ரோடு எரிமேடு முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுங்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அங்கு போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருஞானம்( 25) மற்றும் ஆபாஸ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two people were arrested for selling drugs in kovai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->