தேனி || குளிக்கச் சென்றபோது நேர்ந்த கொடூரம் - கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.!
two college students died in theni
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள், இருவரும் நேற்று விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணைக்கு முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது, தடுப்பணைக்கு முன்புள்ள ஆற்றுசுழலில் சிக்கியதில், லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் அதனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாளில் தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two college students died in theni