மருத்துவரின் அலட்சியத்தால் பலியான இரு சிசுக்கள்..! சோகத்தில் உறவினர்கள்..!
twin baby dead because for careless of doctor
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள, பூண்டி கல்லூரி சாலையில் வசித்து வருபவர் குமரவேல் மற்றும் விஜயலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் தஞ்சை அபி அண்ட் அபி மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
மருத்துவர் ராதிகா ராணி அளித்த சிகிச்சையால் விஜயலட்சுமி கர்ப்பமானதாக கூறுகிறார்கள். மேலும் அவருக்கு இரட்டை குழைந்தை என்பதால் கடந்த 5 மாதங்களாக விஜயலட்சுமி அதே மருத்துவமனையில் பல லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமிக்கு இடுப்பு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். மருத்துவர் ராதிகா ராணி குழந்தை நன்றாக இருக்கிறது இருப்பினும் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படியும் அறிவுரை வழங்கி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இருப்பினும், விஜயலட்சுமிக்கு வலி குறையாததால் செவிலியர்கள் மருத்துவர் ராதிகா ராணியை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் செல்போனிலேயே சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் கூற வலி இன்னும் அதிகமானது.
இதனால் ராதிகாராணி, தனக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்கும்மாறு தெரிவித்தார்.அவர் சோதித்து பார்த்த போது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் இறந்து விட்டது தெரியவந்தது.
இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், சிசுக்களை வெளியில் எடுத்து விஜயலட்சுமியை காப்பாற்றியுள்ளார் அந்த மருத்துவர். ராதிகா ராணியின் அலட்சியமான பொறுப்பற்ற செயலால் தான் குழந்தைகள் இறந்து விட்டதாக விஜயலட்சுமி குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twin baby dead because for careless of doctor