திருவாரூர் || அறுந்து விழுந்த மின்கம்பிக்கு பலியான 12 வயது சிறுவன்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் || அறுந்து விழுந்த மின்கம்பிக்கு பலியான 12 வயது சிறுவன்.!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அடியக்கமங்கலம் ஜலாலியல் தெருவைச் சேர்ந்தவர்கள் சுல்தான் சலாவுதீன்-நஜிபு நிஷா தம்பதியினர்.  இவர்களுடைய மகன்  முகமது முஜமில். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த நேரத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் தனது வீட்டிற்கு மிதிவண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தார். 

அப்போது கனமழையால் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி முகமது முஜமினுடைய மிதிவண்டியில் உரசியதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மின் கம்பி அறுந்தது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதற்கிடையே மருத்துவமனைக்குச் சென்ற முகமது முஜமிலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின் கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twelve years old boy died in tiruvaru for electric shock attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->