அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் வைத்தியம் பார்க்கும் அவலம்..!
treatment given by Cleaning staff in hospital
தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே பெரியாளூரைச் சேர்ந்தவர் ஆர்.கார்த்தீபன். இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
அந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்தீபனை மீட்ட பொதுமக்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். அனால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என்று யாரும் இல்லை என்று தெரிய வருகிறது.
அப்போது, அங்கிருந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் யூனிபார்முடன் கார்த்தீபனுக்கு சிகிச்சை அளித்து தையல் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதை தொடர்ந்து, விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்றுவது அவசியம், மேலும் அவசரம் கருதி துப்புரவுப் பணியாளர் தையல் போட்டிருந்தாலும், அங்கிருந்த மருத்துவர்கள் அதனை அனுமதித்தது பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளைக் கவனிக்கக் கூட மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
English Summary
treatment given by Cleaning staff in hospital