மதுரை ரயில் நிலையத்தில் மழைநீர் அருவியாக கொட்டும் வீடியோ வைரல்.!
train water in madurai railway station
மதுரையில் அமைந்துள்ள ரயில் நிலைய பிளாட்பார்ம் மேற் கூரையில் இருந்தவாறு மழை நீர் அருவி போல கொட்டுகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக மதுரை மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது.
அதிலும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய நிலையில், மதுரையில் அமைந்துள்ள ரயில் நிலைய பிளாட்பார்ம் மேற் கூரையில் இருந்தவாறு மழை நீர் அருவி போல கொட்டுகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
train water in madurai railway station