திருவண்ணாமலை: இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - ஒருவர் பலி
Tractor twowheeler accident in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை (வயது 52). இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது களம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக அண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலையை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அண்ணாமலை இயக்குனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த களம்பூர் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tractor twowheeler accident in Tiruvannamalai