வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்.!
touristers increase in kanniyakumari sea for holidays
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்று குமரிக்கடல். இங்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிப்பதற்காக வந்து செல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் குமரியில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்ப்பதற்காக அதிகலையிலே பயணிகள் வந்துள்ளனர்.
அதன் படி, காலையில் சூரியன் உதயமாகும் நிகழ்வை பார்த்து முடித்துவிட்டு, பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.
வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் மூன்று மணி நேரம் காத்திருந்து பார்த்த்துச் சென்றனர். இதையடுத்து, கடலின் நடுவே பாறையில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு பயணிகளால் செல்ல முடியாமல், தூரத்தில் இருந்தபடியே பார்த்து ரசிக்கின்றனர்.
மேலும், சூரிய உதயத்தை செல்போனில் படம்பிடித்தும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் காணப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
touristers increase in kanniyakumari sea for holidays