#BREAKING || தமிழகத்தில் நாளை இந்த 3 மாவட்டங்களில் மட்டும் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்.! சற்றுமுன் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை நாளான நாளையும், தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கூடம் மற்றும் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் முழுவதும் டாஸ்மாக் கடை மூட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow tasmac closed IN KANNIYAKUMARI 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->