ராமநாதபுரத்தில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்...! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க...! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற நாளை மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம்: ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். 

கல்வி தகுதி: 

•8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை

•ஐ.டி.ஐ.,

•டிப்ளமோ,

•பொறியியல் பட்டதாரிகள்

•முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள்,

•செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தொடர்பு கொள்ளலாம்.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow mar 18th private sector employment camp in ramanathapuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->