கனமழை காரணமாக நாளையும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!  - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாகவே கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனை எடுத்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 

RAIN, SEITHIPUNAL

இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளையும் (10.08.2019) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கோவை மாவட்டத்தின் ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டு உள்ளார். இன்றும் கோவை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorow leave for school and college in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->