பழனியில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


எல்லோராலும் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி. இந்தக் கோவிலில் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. 

ஆனால், இந்த ரோப்கார் சேவைகள் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் என்று பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. 

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில், "இந்த பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. ஆகவே பக்தர்கள் மின் இழுவை ரெயில் மூலமாகவோ, படிப்பாதை வழியாகவோ மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today stop rope car sevirce in palani murugan temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->