தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்று மறுவாக்குபதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாவது,

சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்றைய தினம் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை உருது பள்ளி மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today school leave for urban local election area


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->