குரூப் 5A தேர்வு முடிவுகள் எப்போது.? விரைவில் வெளியாகும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குரூப் 5A தேர்வுக்கான பதவிகளில் பிரிவு அலுவலர், உதவியாளர் ஆகிய 170க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அதன்படி, இந்த பணியிடங்களுக்கு 1114 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது.

இதில் அறிவிப்பு வெளியிட்ட போது தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனையடுத்து தேர்வு எழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என தேர்வர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 5A results soon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->