போக்சோ வழக்கில் கைதானவருக்கு தமிழக அரசு சார்பில் கனவு ஆசிரியர் விருது.!!
TNgovnt awarded dream teacher award to arrested person under POCSO case
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு கனவு ஆசிரியர் விருதுக்கு தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி துறை மூலம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடை பெறவுள்ளது.
தமிழக அரசின் இந்த விருதுக்காக விழுப்புரம் மாவட்டம் சார்பில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பள்ளிக்கல்வி துறையின் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TNgovnt awarded dream teacher award to arrested person under POCSO case