அனைவர் வாழ்விலும் அமைதியான சூழல் நிலவ இறைவனை பிரார்த்திக்கிறேன் - அண்ணாமலை வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "இயேசுபிரான் சக மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே தியாகம் செய்து மீண்டும் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

புதிய நம்பிக்கையை உருவாக்கும் திருநாளில் அனைவர் வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bjp leader annamalai wishes for easter festival


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->