முகநூல் காதல் அக்கா, தங்கையின் வாழ்க்கையை தெருவில் நிறுத்திய சோகம்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


முகநூல் பழக்கம் அக்கா, தங்கையின் வாழ்க்கையை பெரும் திருப்பத்திற்குள்ளாகியுள்ள பதைபதைப்பு சம்பவம் தெரியவந்துள்ளது. பெண்கள் கவனத்துடன் செயல்படாவிட்டால், காதல் என்ற மாய வலையில் விழுந்து வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும் என்பது நிதர்சனமும் ஆகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த 19 வயது மற்றும் 22 வயது சகோதரிகள் இருவருக்கும், கடந்த 2014 ஆம் வருடம் சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வந்த செந்தில்குமார் (வயது 38) என்பவருடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சகோதரிகள் இருவரிடமும் ஆசைவார்த்தை கூறிய காமுகன், இருவரிடமும் பழகி வந்துள்ளான். மேலும், இருவரிடமும் உல்லாசமாக இருந்துள்ளான். இந்நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் இருவரின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்யாமல் இருக்க நகை மற்றும் பணத்தை கேட்டு செந்தில்குமார் மிரட்டவே, இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் செந்தில்குமாரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வசியராணி நடத்தியுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில், கடந்த 2014 ஆம் வருடம் இணையவழியில் திருப்பூரை சார்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் செந்திலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாளடைவில் நன்றாக பழக தொடங்கிய நிலையில், தங்களது கருத்துக்களும் பகிர்ந்துள்ளார். தங்களின் போட்டோக்களையும் பரிமாறிக்கொண்ட நிலையில், கோயம்புத்தூரில் நேரில் சந்தித்து பேசி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த உல்லாச நிகழ்வுகளை பெண்ணிற்கு தெரியாமல் காமுகன் செந்தில்குமார் விடியோவாக பதிவு செய்துள்ளான். 

கடந்த 2015 ஆம் வருடம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் இருப்பதால் பெண்மணி செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதை நிறுத்தியுள்ளார். பெண்மணி தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்கையில், தனது தங்கையின் அலைபேசியில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்பின்னர், பெண்ணின் தங்கையுடன் செந்தில்குமார் சாட்டிங் செய்ய தொடங்கியுள்ளான். பெண்ணின் தங்கையையும் நயவஞ்சகமாக ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்த நிலையில், இதனையும் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளான். இதனிடையே, பெண்ணின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட கணவன்கள், இருவரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் செந்தில்குமாரின் விவகாரம் தெரியவந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்கள் மனைவியை காப்பாற்ற உதவி செய்யாமல், பெற்றோரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயத்தை மீண்டும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட செந்தில்குமார், சகோதரிகளை மற்றொரு நபர் போல தொடர்பு கொண்டு பேசி உங்களின் ஆபாச மற்றும் அந்தரங்க விடியோவை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளான். மேலும், அவர்களை மிரட்ட ஆபாச படத்தின் சில காட்சிகளை அனுப்பி வைத்திருக்கிறான். இதனால் பதறிப்போன சகோதரிகள் பணம் மற்றும் நகை கொடுப்பதாக தெரிவிக்கவே, ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 40 சவரன் நகைகளை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். இப்படியாக பலமுறை பலகுரலில் என செந்தில்குமார் பேசி மாறுவேடத்தில் வந்து பணத்தை பெற்று சென்றுள்ளான். வீட்டிற்கே வந்தும் பணம் மற்றும் நகைகளை வாங்கிச்சென்ற நிலையில், செந்தில்குமாரின் மீது சந்தேகமடைந்த சகோதரிகள் மற்றொரு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில் விஷயம் புரிந்துள்ளது.

இதன்பின்னர், எங்களால் இதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது, எங்களை விட்டுவிடு என செந்தில்குமாரிடம் சகோதரிகள் கெஞ்சி கேட்டும் பலனில்லாத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் செந்திலை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செந்தில்குமார் இது போன்று பிற பெண்களிடமும் கைவரிசை காண்பித்துள்ளனா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கியிருந்தால் அதில் இருந்து வெளிவந்து அல்லது வெளிவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காமுகனின் மிரட்டலுக்கு பயந்தால் அது நாளை உங்களை மரணிக்கும் நிலைக்கு கூட தள்ளலாம் என்பதை மறவாதீர்கள். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Sisters Cheated by Culprit Chennai Senthil Kumar Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->