நெல்லை: காதல் மனைவியின் வளைகாப்பை மருத்துவமனையில் நடத்திய கணவன்.. நெகிழ்ச்சி பதிவு.! - Seithipunal
Seithipunal


மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவமனையிலேயே வளைகாப்பு செய்த நிகழ்வு நடந்துள்ளது. 

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தன்னுடன் ஜவுளி கடையில் பணியாற்றி வந்த பெற்றோரை இழந்த சாரா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில், சாரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த வாரம் பிரசவத்திற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக வளைகாப்பு நடத்த இயலாமல் போகவே, மருத்துவமனையில் வைத்து மனைவிக்கு வளைகாப்பு நடத்தி விட வேண்டுமென்று ஆசை கருப்பசாமிக்கு எழுந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, தனது விருப்பத்தை மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கூறி அனுமதி பெற்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பிற கர்ப்பிணிகள் முன்னிலையில் தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சி அடைந்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Tenkasi Love Husband Make Baby Shower Function at Palayamkottai GH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->