திருமுல்லைவாசல் பகுதியில் பரபரப்பு கிளப்பிய மர்ம பெட்டி: தீவிர போலீசார் விசாரணை - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை, திருமுல்லைவாசல் மீனவர்கள் இன்று காலை மீன்பிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கரைக்கு நடந்து சென்றனர். 

அப்போது சுமார் ஒன்றரை அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பூசப்பட்டு சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை பார்த்தனர். 

பின்னர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த க்யூ பிரிவு, தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் இந்த மர்ம பெட்டி எப்படி இங்கு வந்தது, யார் கொண்டு வந்தது, மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கரை ஒதுங்கிய மர்ம பெட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirumullaivasal area caused Mysterious box police investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->