செல்பி மோகத்தால் சேர்ந்த விபரீதம்.. மூன்று இளைஞர்கள் பரிதாப பலி..!
Three youths were killed when Selby fell into the water
ஆற்றில் செல்பி எடுக்க சென்ற வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ், ஹரீஷ் ஆகியோர் தங்களது நண்பருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள வரதமாநதி அணைக்கு சென்றனர்.
அந்த அணையில் அவர் செல்பி எடுக்க முயன்ற போது மூவர் எதிர்பாராஹ விதமாக தவறி விழுந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவர்களை மீட்க முயற்சி செய்துள்ளனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின் மூவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்களுடன் வந்த ஹரிஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Three youths were killed when Selby fell into the water