பழனியில் பக்தர் மீது தாக்குதல் - 3 பாதுகாவலர்கள் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


பழனியில் பக்தர் மீது தாக்குதல் - 3 பாதுகாவலர்கள் இடைநீக்கம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தன குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்தார். 

இந்த நிலையில் அவர் இரவு 9:00 மணிக்கு மேல் படிப்பாதை மூலமாக மலைக்கோவிலுக்குச் செல்ல முயன்றார். அப்போது அவரை பாத விநாயகர் கோவில் அருகே இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, 'பக்தர்களை அனுமதிக்கும் நேரம் கடந்து விட்டது;

மேலே யாரும் செல்ல முடியாது' எஎன்றது தெரிவித்துள்ளனர். அதற்கு பக்தர் 'வெகு தொலைவில் இருந்து வந்துள்ளோம்' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அடிதடியில் முடிந்தது. 

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக தங்களது செல்போனில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. 

இதைத் தொடர்ந்து, பக்தரைத் தாக்கிய பாதுகாவலர்களான செல்வ கணபதி, ராஜசேகர் தங்கவேல், கருப்பையா உள்ளிட்டோரை கோவில் நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three securities suspened for attack devotees in palani temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->