திருநின்றவூர் : அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி - 3 பேர் கைது.!
three peoples arrested for money fraud in chennai
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த ரெட்டிகுப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர், திருநின்றவூர் பகுதியில் ஒரு டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பயணசீட்டு போடுவதற்காக அடிக்கடி ட்ராவல்ஸ் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.
அதன் படி, அலுவலகத்திற்கு வந்த கார்த்திகேயன், சர்மிளாவிடம் எனக்கு வருமான வரித்துறையில் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சர்மிளா, தனது தம்பிக்கு அரசுவேலை வாங்கித் தரும்படி தெரிவித்தார்.
இதற்காக சர்மிளாவின் தம்பி உள்பட மூன்று பேரும் ரூ.18 லட்சத்து 19 ஆயிரம் வரை கார்த்திகேயனின் தோழியான யமுனா என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால் கார்த்திகேயன் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து சர்மிளா கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சர்மிளா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கேயன் மற்றும் அவரது தோழி யமுனா உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கார்த்திக்கேயன் வேலை வாங்கி தருவதாக வாங்கிய பணத்தில் புதிதாக கார் வாங்கி தோழி யமுனாவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் போலீசார் கைதான இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
three peoples arrested for money fraud in chennai