கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவன்.! ஆத்திரத்தில் காதலியின் முடியை வெட்டி சித்தரவதை - மனைவி உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்-மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிவானந்தம், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவந்தார். 

இதன் மூலம் இவருக்கும் ஆறுமுகத்தின் மனைவி சுமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன் பின்னர் சிவானந்தமும், சுமதியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டும், அதே சமயம் உல்லாசமாக இருந்தும் வந்துள்ளனர்.

இந்த விவகாரம் மல்லிகா மற்றும் அவருடைய மகன், மகளுக்கு தெரிய வர, அவர்கள் கள்ளக்காதலை கைவிடுமாறு சுமதியையும், சிவனந்தத்தையும்  கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த மல்லிகா கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி, போலீசார் சிவானந்தம் மற்றும் சுமதியை விசாரணைக்கு அழைத்து, அவர்களை கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்து அனுப்பிவைத்தனர். அதன் பின்னரும் கள்ள காதலை கைவிடாமல் இருந்துள்ளனர்.

இதையறிந்த மல்லிகா சிவனந்தத்திடம் மீண்டும் அறிவுறுத்தினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மல்லிகா தன்னுடைய மகன் மற்றும் மக்களுடன் சுமதியின் வீட்டுக்கு நேரில் சென்று கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தினர். ஆனால், சுமதி மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா தன் பிள்ளைகளோடு சேர்ந்து, திடீரென சுமதியின் மீது மிளகாய் பொடியை தூவி, தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்தனர். மேலும், சுமதியின் மகனையும் அவர்கள் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மல்லிகா, அவருடைய மகன் மற்றும் மகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for harassment husband girl friend


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->