விசாரணைக்கு அழைத்த போலீசார் மீது சராமாரித் தாக்குதல் 3 பேர் கைது.!
three peoples arrested for attack police in chennai
சென்னையில் உள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை வெட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீஸ்காரர்கள் 2 பேர், நேரில் சென்று உமாபதியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்தனர். அப்போது உமாபதி மற்றும் அவரது நண்பர்கள் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கினர்.
அதன் பின்னர் உமாபதியின் நண்பர் ஒருவர், பீர் பாட்டிலை உடைத்து தனது உடலில் கீறிக்கொண்டார். அத்துடன் போலீசாரையும் குத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இரண்டு போலீஸ்காரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், பிரேம், ராகுல் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான உமாபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
three peoples arrested for attack police in chennai