தூத்துக்குடி | டாஸ்மாக் அருகே வாகன ஓட்டிகளை பதறவைத்த சொகுசு வாகனம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 44) இவர் தேங்காய், பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

திருச்செந்தூர்-நெல்லை சாலை ஓரத்தில் டாஸ்மார்க் அருகே அவரது காரை நிறுத்தி விட்டு நேற்றிரவு உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளார். 

அப்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இது குறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைத்தனர். 

இது தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் நடத்திய விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் புகை கிளம்பி தீ பிடித்ததாக தெரியவந்தது. 

மேலும் விபத்தின் போது காரில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவித செயல்களும் நடக்கவில்லை. பிரதான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi suddenly car caught fire


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->