தான் காதலித்த பெண்ணை நண்பனும் காதலித்ததால் ஆத்திரம்.. தலையை வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்.!
Thoothukudi Kovilpatti 17 Aged Man Murder his Friend due to Love Issue
தான் காதலித்து வந்த பெண்ணை தனது நண்பனும் காதலித்து வந்ததால், 17 வயது சிறுவன் கொலைகாரனாக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சார்ந்தவர் மதன் குமார். இவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக கோவில்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மதன்குமாரை கொலை செய்ததாக 17 வயது சிறுவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் சிறுவனிடம் கொலைக்கான விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையில், 17 வயது சிறுவன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அதே பெண்ணை மதன்குமாரும் காதலித்து வந்த நிலையில், 17 வயது சிறுவன் மதன் குமாரை எச்சரித்துள்ளார். மதன் குமார் இதனை கண்டுகொள்ளாமல் பெண்ணை காதலித்து வந்த நிலையில், சம்பவத்தன்று 17 வயது சிறுவன் திட்டமிட்டு மதன் குமாரை மதுபானம் அருந்த அழைத்து சென்றுள்ளான்.
அங்கு இருவரும் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், மதன்குமாருக்கு போதை ஏறியதும் அரிவாளால் அவரின் தலையை 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். பின்னர், எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார். சிறுவனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Kovilpatti 17 Aged Man Murder his Friend due to Love Issue