ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்த கார் விபத்து! ஒரே நேரத்தில் பறிபோன உயிர்கள்!
thitakudi accident four members died
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேலம் நெடுஞ்சாலையில் பரங்கிப் பேட்டையில் இருந்து சேலம் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அதனை அடுத்து எதிரே வந்த கார் மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.
காரில் வந்தவர்கள் திட்டக்குடி வட்டம் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைக்கு மொட்டையடிக்க தேவநாதன் குடும்பத்தினர் 8 பேர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டுப் பேரும் படுகாயமடைந்தனர். இதில் ரேவதி, பவானி, பரிமளா மற்றும் லாரி ஓட்டுனர் உதவியாளர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த குழந்தைகள் உட்பட 5 பேரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடந்த லாரியில் உள்ள மீன்களை அங்குள்ள மக்கள் அள்ளி சென்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thitakudi accident four members died