இனி பெட்ரோல் பங்கில் இதற்கு தடை! காவல்துறை அதிரடி உத்தரவு.!
Thiruvarur Police warning For Petrol Punk
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் பங்குகளில் டீசல் மற்றும் பெட்ரோலை பாட்டில்களில் கொடுக்க கூடாது என்று திருவாரூர் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக தமிழகத்தில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. பாஜக பிரமுகர்களின் அலுவலகங்கள், வீடு, ஆர் எஸ் எஸ் அலுவலகங்கள், இந்து முன்னணி பிரமுகர்களின் வீடு உள்ளிட்டவை சூறையாடப்பட்டு வருகின்றன.
அனைத்து இடங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட 67 இடங்களில் முழுக்க முழுக்க காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றது.
அத்துடன் பெட்ரோல் குண்டுகளை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக திருவாரூர் மாவட்ட போலீசார் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
Thiruvarur Police warning For Petrol Punk