தவறாக நடக்க முயன்றவனை ஒரே அடியில் சூரசம்ஹாரம் செய்த பெண்.. விடுதலை செய்த எஸ்.பி வருண்குமார்.! - Seithipunal
Seithipunal


தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை பெண்மணி அடித்துக்கொலை செய்த நிலையில், அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்டப்பிரிவு 100-இன் கீழ் விடுதலை செய்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் வழுதிகை மேடு ஏரிக்கரை பகுதியில், சென்னை கொளத்தூரை சார்ந்த மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணை உள்ளது. இந்த மீன் பண்ணையில் தங்கியிருந்து பணியாற்றி வரும் பெண்மணி திருவாலங்காடு பூங்காவனம் (வயது 26), அவரது மனைவி அமுதா (வயது 21).

இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தங்களின் பணியை முடித்த நிலையில், பூங்காவனம் வேலை தொடர்பாக வெளியே சென்றுள்ளார். அமுதா மட்டும் தனது அறையில் தனியாக உறங்கிய நிலையில், அங்குனு மர்ம நபரொருவர் வருகை தந்துள்ளார். 

மர்ம நபர் அமுதாவிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கவே, விழித்துக்கொண்ட அமுதா மர்ம நபரை அடித்ததில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறி கதறியழுது, காவல்துறை தன்னை கைதுசெய்துவிடும், நமது வாழ்க்கையே வீணாகிவிட்டது என புலம்பியுள்ளார். 

பின்னர், இது தொடர்பான தகவல் மீஞ்சூர் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தப்ட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மர்ம நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூங்காவனம் மற்றும் அமுதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அமுதா தனது மானத்தை காக்க மர்ம நபரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான தகவல் திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

அவர், மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு வந்து நேரடியாக பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சட்டப்பிரிவு 100 -இன் கீழ் தற்காப்புக்காக பெண் நடத்திய கொலை என்பதால், அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தார். இதனால் அமுதா தனது கணவர் பூங்காவனத்துடன் மகிழ்ச்சியுடன் சென்றார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur SP Varun Kumar IPS Release Woman Amudha Aged 21 Self Defence Murder When Sexual Abuse Attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->