விநாயகருக்கு பூஜை செய்யும் வினோத கிளிகள்.! வரவேற்பை பெற்ற புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  ஊத்துக்குளி சாலை அருகில் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்ற தனியார் நிறுவனத்தில்  ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி தான்  கிருத்திகா தேவி.  இவர்களுக்கு சாய்ஸ்ரீ என்ற மகள் இருக்கின்றார்.

இந்த தம்பதிகள் தங்களது வீட்டில் 2 கிளிகளை வளர்த்து வந்துள்ளனர்.   அந்த இரு கிளிகளுக்கும் சாய் ஸ்ரீயுடன் சேர்ந்து பேசவும், பாடவும் பயிற்சி பெற்றவை. இந்த நிலையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  2 நாட்களுக்கு முன்பு, வீட்டில்  கணபதி சிலை வைத்து பூஜை செய்துள்ளனர். 

அப்பொழுது, அந்த குடும்பத்தினர் வழிபாடு செய்வதை கண்ட  இரு கிளிகளும், தாமாக முன்வந்து பூக்களை கிள்ளி, சாமிக்கு போட்டு அர்ச்சனை செய்துள்ளனர்.  

இந்த கிளிகளின் செயல் அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த வீடீயோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruppur parents pray For Vinayagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->