குளியலுக்கு கிடைத்த பலன்..நடவடிக்கை எடுத்த கலெக்டர்..! சேகர் ஹாப்பி அண்ணாச்சி.!
thiruppur collector says about water issue
திருப்பூரில், சமூக ஆர்வலர் ஒருவர் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை கண்டிக்கும் விதமாக, அவ்வாறு வீணாகும் குடிநீரில் சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டம் செய்து கவனத்தை ஈர்த்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்- அவிநாசி சாலையில் இருக்கும் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகின்றது. பலமுறை பொதுமக்கள் இதுகுறித்து புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அதே பகுதியை சமூக ஆர்வலரான சந்திரசேகர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தேங்கி நிற்கும் குடிநீரில் இறங்கி, சோப்பு போட்டு நுரை பொங்க குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய்கார்த்திகேயன், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
thiruppur collector says about water issue