முருக பக்தர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. கொண்டாட்டமும், கோலாகலமும்..! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வானது கோவில் வளாகத்தில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்ட நிலையில், தற்போது சூரசங்காரம் கடற்கரையிலேயே நிகழும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் வைத்து இந்த வருடமும் வழக்கம்போல் நடைபெறும். ஆனால், இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 

பக்தர்கள் நேரலையில் சூரசம்ஹாரம் நிகழ்வை பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே சூரசம்ஹாரத்தில் பங்கு பெற அனுமதி அளிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur Soorasamharam Festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->