தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகளில் மெத்தனம்..!!கொரோனா பரவும் அபாயம்..!!
There is a risk of corona spreading due to low visibility along the Kerala border
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவபவர்களிடம் தீவிர பரிசோதனை செய்துவருகிறது சுகாதாரத்துறை.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது ஆனால் அங்குள்ள 3 முக்கிய வழிதடங்களில் மட்டுமே சுகாதாரதுறை கண்காணிப்பில் ஈடுப்படுகின்றனர்.
மீதமுள்ள வழிதடங்களில் கண்காணிப்பு இல்லாததால் அந்த வழிதடங்களின் வழியே கேரளாவில் இருந்து மக்கள் வருகின்றனர் எனவும் இதானால் அங்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் பிறகு மக்கள் அதிக அளவில் வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
There is a risk of corona spreading due to low visibility along the Kerala border