எம்.எல்.ஏ-வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து சரளை மண் வெட்டி எடுத்து தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் மணல் ஏற்றி சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ் சுரண்டை பிள்ளையார் கோவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ராஜதுரை என்பவரின் மகன் 4 வயது சிறுவன் மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சுரண்டை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thenkasi congress MLA tractor accident 4 years child death


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->