தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பதறவைத்த பெண்மணி.. கைக்குழந்தையுடன் விபரீத முயற்சி.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியை சார்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜெயமணி (வயது 21). இவர் நேற்று தனது இரண்டு வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு வந்த நிலையில், அவரது கைப்பையை சோதனை செய்தனர். 

அவர் கொண்டு வந்திருந்த கைப்பையில் 2 லிட்டர் கேனில் மண்ணெண்ணெய்யை வைத்திருந்த நிலையில், இது குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை செய்த சமயத்தில், அவர் தீக்குளிக்க முயற்சித்து வந்தாக கூறியுள்ளார். 

இதன்பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், " கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கணவரை சீட்டு விளையாட அழைத்து சென்று, தகராறு காரணமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியாகினர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்த நிலையில், மற்றொருவர்களை கைது செய்யவில்லை. எனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், எனது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் " என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Collector Office girl suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->