கூலாக கொள்ளையடிக்கும் கொள்ளையன்..! என்ன செய்தான் தெரியுமா.?!
theft in kanyakumari district
தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வரும் கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, அந்த கொள்ளையன் அங்குள்ள கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான், லேப்டாப் ஒன்றையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 85 ஆயிரம் ரூபாயை டார்ச்லைட் உதவியுடன் சாவகாசமாக எண்ணிப் பார்த்துத் திருடிச் சென்றுள்ளான்.
மேலும், முன்னதாக எலக்ட்ரானீக் மற்றும் செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் அங்கும் பொருட்களை திருடியுள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சியை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
English Summary
theft in kanyakumari district