#மதுரை || கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த சூர்யா(23) என்பவர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்துள்ளார். 

அப்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் கள்ளழகர் தசாவதாரம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும் ராமராயர் மண்டகப்படி அருகே கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதிச்சியம் போலீசார், சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சூர்யா கீழே விழுந்து உயிரிழந்தாரா? அல்லது மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youth killed who came to see the madurai Chithirai festival


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->