கன்னியாகுமரி: கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு.!
The worker fell into the canal and died in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி அருகே உள்ள இடையன்விளை பகுதியை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி முருகன்(60). இவர் நேற்று மாலை பொற்றையடி அருகே உள்ள வெங்கலராஜன் கோட்டை கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உள்ளார்.
இந்நிலையில் நீரில் நீண்ட நேரமாக கிடந்ததால் முருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தென்தாமரைக்குளம் காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The worker fell into the canal and died in kanniyakumari