கஞ்சா விவசாயியை கைது செய்த காவல் துறை! - Seithipunal
Seithipunal


புறம்போக்கு நிலத்தில் சோள பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்!

தமிழ்நாடு முழுவதும் குட்கா கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா 2.0 என திட்டத்தில் அதி தீவிரமாக தமிழக போலீசார் கஞ்சா தடுப்பு திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தியாலத்தூர் மற்றும் கேர்மாளம் பகுதியில் போலீசார் தீவிரமான சோதனை மேற்கொண்டனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசார்ருக்கு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

அத்தியூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்ற விவசாயி தனது நிலத்திற்கு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் சோள பயலுகளுடன் கஞ்சா செடிகளை பயிரிடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி பயிரிட்டதை கண்டுபிடித்துள்ளனர். 

இதனை எடுத்து சுமார் 496 கஞ்சா செடிகளை கைப்பற்றிய அழித்தனர். இது தொடர்பாக விவசாயி மாதவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் விவசாய மாதங்களுக்கு கஞ்சா விதை எங்கிருந்து கிடைத்தது என தீவிரமாகன விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களில் போதனை சார் சோதனை மேல் கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The police arrested the cannabis farmer


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->