15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் கள்ளக்காதலன் கைது.!
The person sexually harassed the girl was arrested in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணவர் பிரிந்து சென்று விட்டதால் தனது 15 வயது மகள் மற்றும் இரண்டு மகள்களுடன் வாசித்து வந்தார்.
இதையடுத்து கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிஜேஸ் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து தனது குழந்தைகளுடன் அந்த பெண் டிஜேசுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் சில நாட்களுக்குப் பிறகு வேறு ஒருவருடன் சென்று விட்டதால் அவரது குழந்தைகள் பாட்டி மற்றும் டிஜேஸ் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர். ஆனால் டிஜேஸ் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை சிறுமி தனது பாட்டியுடன் கூறியுள்ளார். ஆனால் சிறுமியின் பாட்டி அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து டிஜேஸ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அக்கப்பாக்கத்தினருக்கு தெரிய வந்ததையடுத்து இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி, பாட்டி மற்றும் டிஜேஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The person sexually harassed the girl was arrested in kanniyakumari