கள்ளக்காதலை கைவிடாத மனைவி.. நடுத்தலையில் அறிவாளால் வெட்டிய கணவர்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் நடுத்தலையில் அறிவாளால் கணவர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சென்னியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 30 வயதுடைய வாலிபரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி, வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார்.

இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் மனைவி கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று கணவன்-மனைவியிடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அங்கிருந்து அறிவாளை எடுத்து மனைவியின் நடுதலை மற்றும் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband cut his wife in the middle of the head in kovai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->